Tuesday, November 23, 2021

உயிரரங்கம்

நால்வீதிக்குள்ளே பல நூற்றாண்டுகள் 
சிந்திக் கிடக்கின்றன 
பொறுக்குவாரின்றி நேரமின்றிப் 
புவனத்தின் புள்ளியில் 
போகின்றது வருவது எல்லாம் 
பதித்துவிட்டுப் போகும் 
காலத்தின் முதுகரங்கள் 
கைதொட்ட கருங்கற்கள் 
கதைசொல்லிப் பரந்து நிற்கும் 
வாழ்கின்ற தலைமுறைக்குள் 
வாழ்ந்த தலைமுறைகள் 
வழிவழியாய் நினைவில் படிவமாகி 
வீதிவழி போகின்ற உருவமாகும் 
வற்றாத நினைவுகள் 
வளங்கொழிக்கும் வயலரங்கம் 
தூக்கத்தில் தொடர்கதையாய்த் 
திகழும் உயிரரங்கம். 

***

No comments:

Post a Comment