ஏன் என்ற கேள்விக்கு
விடைதர வேண்டி
எவ்வாறோ எக்கருத்தோ எம்மொழியோ
எவர்க்கோ உரைக்க
அவையெல்லாம்
அன்றிலிருந்து இன்றுவரை
இனி என்றோ அன்றும் வரை
நின்று நிலைத்திடினும்..
நீள் புவியும் நெடுங்காலத்து ஓர் கணமும்
உள் நின்ற உயிர் விஸ்தாரம்
உணர்கின்ற அர்த்தம் என்ன?
***
No comments:
Post a Comment