பூவினை ஊதும்
புரிவண்டார்க்கும்
பொன்மயல் பிறந்தது
கண்ணா கண்மலராய்!
எண்ணொளி இங்கிதம்
விண்ணொலி மீட்டிக்
கண்ணில் கனிந்தது
மண்ணில் விளைந்தது
உண்மை புலர்ந்தது
உத்தமனே! உன்
உளங்கனிவாய்!
புள்ளொலி சிலம்பிட
உள்ளருள் விம்மிட
நள்ளிருள் ஒளிவிட
விள்ளுமுன் வியன்குழல்
கள்ளமொழித்தது
குள்ளக் குளிர்ந்திடு
கள்ளழகா!
வாம்பரி இவர்ந்து வந்தனையே!
நோமுளத் துரிசு இரிந்தனையே!
தள்ளுவன் உன்னைத்
தாவியணைப்பன்
ஆவியுள் குளிரும் நெருப்பாகிப்
பாவியென்னிதயப்
பராய்த் தவிசேறிப்
பாம்பணை யென்றே
யோகு புணர்ந்தாய்!
ஆம்பரிசுணர்ந்தேன்
ஓம்பறைந்தேன்
நாமெனும் உறவில்
நான் மறைந்தேன்
***
தாவியணைப்பன்
ஆவியுள் குளிரும் நெருப்பாகிப்
பாவியென்னிதயப்
பராய்த் தவிசேறிப்
பாம்பணை யென்றே
யோகு புணர்ந்தாய்!
ஆம்பரிசுணர்ந்தேன்
ஓம்பறைந்தேன்
நாமெனும் உறவில்
நான் மறைந்தேன்
***
No comments:
Post a Comment