Saturday, February 27, 2016

கனியட்டுமே

காலமும் கனவும் கனியட்டுமே 
கனிந்தால் 
கோலமும் குணமும் நிறையட்டுமே 
நிறைந்தால் 
ஓலமிடும் உள்ளம் ஒடுங்கட்டுமே 
ஒடுங்கினால் 
பால் வெண்ணீற்றின் கண் திறக்கட்டுமே 
திறந்தால் 
நூலுலகின் நுட்பம் புரியட்டுமே 
புரிந்தால் 
ஆலமர் மறைபொருள் விளங்கட்டுமே 
விளங்கினால் 
தூலத்துள் நிற்பது தெரியட்டுமே 
தெரிந்தால் 
சூல்கொண்ட சூட்சுமம் சுடரட்டுமே 
சுடர்ந்தால் 
நால்வகை வாய்மொழி நவிலட்டுமே 
நவின்றால் 
பால்துயில் பரமனைப் பரவட்டுமே 
பரவினால் 
காலமும் கனவும் கனியட்டுமே
கனிந்து
மால்கொண்ட நெஞ்சம் மிதக்கட்டுமே
மிதந்து
ஆள்கொண்ட அருளில் அமிழட்டுமே
அமிழ்ந்து
ஊழ்கொண்ட வாழ்வை மீட்கட்டுமே
மீண்டும்.

No comments:

Post a Comment