ஆழ நெடுங்கடல் பழகிய மீன்
அலை எத்தியடித்திடக் கரைமீது
வாழத் துடித்திட்ட காட்சியினை
வேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான்
மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன்
வெள்ளி துடித்திட்ட மீனொளியில்
மாலை அடைந்தனன் மனமயங்கி
அயர்ந்து விழுந்தனன் மைவரையில்
காலை தொடங்கித் தான் செய்தசெயல்
கடமைதான் என்றுதான் கொண்டாலும்
ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர்
வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய்
வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய்
வான்வயல் கான்கடல் வரப்பெங்கும்
படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில்
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே.
***
No comments:
Post a Comment