நஞ்சமர் கண்டன் காக்க
நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கும்
அஞ்சத்தகு நஞ்சைத் தாங்கும்
விஞ்சத்தகு திறனைச் சிறிதே
தஞ்சம்புகும் எற்கும் தந்தால்
எஞ்சும்நாள் கடக்கலாகும்
பிஞ்ஞகா! பிறையும் சூடும்
விஞ்ஞானம் தரினும் நன்றே.
முத்தாண்ட மோன முறுவல் முகிழ்த்தே
பித்தாண்டும் என்னைப் பிரியாது நித்தியமாய்ச்
சித்தாண்ட சத்தாகும் சிந்திக்கச் சொல்லாகிப்
புத்தாண்டாய் வந்த பரம்.
*
No comments:
Post a Comment