Friday, February 26, 2016

தீயொன்று கண்டேன்

தீயொன்று கண்டேன் -- தீங்கற்றத்
தீயொன்று கண்டேன் 

நீ யொன்றி என்னை -- நீள
நோக்குமுன் விழியில்
நான் எரிகின்ற போது 

தேன் ஒன்று கண்டேன்
தேன் ஒன்று கண்டேன் -- நாதத்
தேன் ஒன்று கண்டேன் 

அன்பென்ற அருவி -- உன்
அமுத நாவில் பொழிய 

வான் ஒன்று அடைந்தேன்
வான் ஒன்று அடைந்தேன் -- இன்ப
வான் ஒன்று அடைந்தேன் 

உயிர் வேகத்தில் நீ கூடவே
உயர் போதத்தில் நாம் சேரவே
வான் நின்று அளந்தோம் -- மகிழ்
வானின்று அலர்ந்தோம் 
உயிர் மன்றில் கலந்தோம்
உணர்வொன்றிப் புலர்ந்தோம்
பயில்வேதப் பொருளாய் விளைந்தோம். 

தீயொன்று கண்டோம் -- தெய்வத்
தீயொன்றக் கண்டோம். 

***

No comments:

Post a Comment