Saturday, February 27, 2016

அருமை

’தனக்கும் பயன்படாமல்
மற்றவர்க்கும் பயனின்றி
என்ன இது! என்ன இது! என்ன இது!’
என்று கேட்ட கழுதைக்கு
ஒரு வேளை குங்குமப் பூ
தெரியுமோ தெரியாதோ
ஆனால் கட்டு எழுதிய
தாள்களின் அருமை
என்னை விட நன்கு தெரியும்தானே? 
என்னை விடும். 
முன்னைவிட உமக்கு நன்கு புரியும்தானே? 

***

No comments:

Post a Comment