Saturday, February 27, 2016

அட்டகாமா

அட்டகாமா கடும்பாலை
விட்ட குறைக்கும் விழல் நீரும் இல்லை
தொட்ட குறைக்குக் குழி நீரும் இல்லை
மலை தொட்டுக் கடல் தொடும்
மரித்த பாலையில்
நிலப்பாழ் நீர்ப்பாழ்
நிலைப்பதுவும் ஊழ்
அங்கும் ஒரு ஜீவன்
மங்காமல் தொடரும்
காலை உருகி மாலை உறையும்
கடலோரம் சேர இரவெல்லாம் பயணம்
வீசிய பனிமூட்டம்
கவிந்த கரைத் தாவரத்தில்
இளங்காலை இளக்கும்
பனிச்சொட்டைக் குடித்து
உயிர் தக்க வைக்கும்
சூக்குமம் கற்றன ஜீவிக்கும்
நாளை காலையில்
நுனிப் பனி நீர் வீழும்
என நம்பிப் பகலெல்லாம்
இரைதேடும் மிருகம்.
மறைதேடும் ஒன்றங்கு
மறைவின்றித் தெரியும்;
திரைமோதும் கடல்
பனிமூடும் மாலை
கதிர் வெதுப்பும் காலை
உயிர் வாழ்வின் தவணை. 

*

No comments:

Post a Comment