Monday, February 29, 2016

பள்ளிக்கூடம்

பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் 
சந்தர்ப்பச் சூழ்நிலையினாலும், 
மனத்தில் உருவான மாச்சரியத்தாலும், 
ஆங்காரத்தாலும், அறிவு போலப் பேசி 
அறிவைக் கைவிட்டு ஆத்திரத்தின் வழியே போய்ப் 
பேசின பேச்சுகளைப் பார்க்கும் போது 
ஒன்று நமக்குத் தெரியவருகிறது.  
‘நாம் யார்?’ ’நம் நிலைமை என்ன?’ 
நாம் மிகவும் சரி என்று நினைத்தாலும் 
நம்மில் நாம் சமநிலை அடைந்தோமா 
இந்தப் படிப்பினைதான் நம் கண் முன் 
தெருட்டிக் கொண்டு நிற்கிறது. 
‘உன்னை நீ அறி’ என்ற டெல்ஃபி அசரீரி 
இன்னும் உரத்துத்தான் ஒலிக்கிறது. 
அது யாரையோ பார்த்து ஒலிக்கவில்லை. 
நம் ஒவ்வொருவரைப் பார்த்தும் 
இதை உணரும் நாள் 
நமக்கான பள்ளிக்கூடம் ஆரம்பம்.

*** 

No comments:

Post a Comment