தனிமை இருளின் பசியகற்றும்
அன்பீந்த புறங்கை என் இதழ் முயங்கும்
குழலாகும்
குழல் விரிந்த நின் கேசம்
நான் திரியும் காடாகும்
கான் விலங்காய் எனை எதிரும்
நின் அங்கம் எங்கும்
பகலை இருள் பூசும்
நின் வதன எழில் நிலவு
பருகக் குவித்துதரும் நின் இதழோ
பகலில் ஒரு நிலாச் சோறு
நின் அகலின் தழல் நிமிர்த்திப்
பருகக் குனிந்த முனிவன்
நிமிரக் கண்ட இருநிலவில்
எந்நிலவின் சோறு இப்பகலின் படையல்!
***
No comments:
Post a Comment