Friday, February 26, 2016

கரப்பு

கரப்பு;
காலங்காத்தால
அலுவலக மேசையருகே
தரையில்
அடித்துவிடு என்றால்
அய்யோ பாவம் என்கிறான் ப்யூன்
இலக்குமியின் கடைக்கண்
என்று அவன் கவலை;
ஏறினால் அருவருப்பு
என்று என் மனநிலை; 
இலக்குமியின் கடைக்கண்
எங்கும் திரிந்து
எங்கோ ஒரு மூலை இடுக்கில்
ஒன்றியது போலும்
யாருமே அடிக்கவில்லை. 

***

No comments:

Post a Comment